இயேசு கிறிஸ்து பொன்மொழிகள் - ஊக்கமளிக்கும் போதனைகள்

44 quotes Religious Leader

மத தலைவர் 4 BCE (estimated) 30 CE (estimated)
கிறிஸ்தவத்தின் மைய உருவாக்குனர். மனிதகுலத்தை பாவத்திலிருந்து காப்பாற்றவும், அவரை நம்பும் அனைவருக்கும் இரட்சிப்பைக் கொண்டுவரவும் பூமிக்கு அனுப்பப்பட்ட கடவுளின் மகன் என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறார்.
Jesus Christ Tamil Picture Quote on sinபாவம் stoneகல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tea Creative │ Soo Chung

உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்.

இயேசு கிறிஸ்து Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on self-introductionஉலகம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Johannes Plenio

உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்க்கு அறிமுகம் செய்துகொள்.

இயேசு கிறிஸ்து Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

உங்களில் தலைவனாக இருக்க விரும்புபவன் உங்களுக்கு ஊழியனாக இருக்கக் கடவன்.{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D| title=அறிவுக் கனிகள்/தியாகம்

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோ ரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்.

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

கிறிஸ்து, மதநூல் எதுவும் எழுதவில்லை. நன்மையான காரியங்களைச் செய்வதிலேயே கருத்தாயிருந்தார். -ஹொரேஸ் மான்

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: "தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ முட்டாளே" என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; 'அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.- [5:22]

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

கனிவுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

அவர்கள் அனைவரும் திகைப்புற்று,"இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!" என்று தங்களிடையே பேசிக் கொண்டனர். - [2:27]

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும். - [3:28 முதல் 29 வரை]

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள். ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள். - [7:20]

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

துயருறுவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

இரக்கமுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! - [6:26]

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

"விபசாரம் செய்யாதே" எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று. உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. "தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்" எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர். - [5:27 முதல் 45 வரை] (மத் 19:9; மாற் 10:11,12; லூக் 16:18)

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். - [7:8; 9]

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

"இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே. - [7:13; 14] (லூக் 13:24)

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெற கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே.

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர்.

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

கிறிஸ்து தர்க்க சாஸ்திரம் எதுவும் தந்து போகவில்லை. அவர் தந்திருப்பது சில எளிய உண்மைகளே. -ஹெடன்

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். [5:13 முதல் 16 வரை] மேலும் (மாற் 9:50; லூக் 14:34-35) உள்ளது

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள் உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங் காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது." [7:24 முதல் 27 வரை]

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,- []

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

அதுமுதல் இயேசு, "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றத் தொடங்கினார். - [4:17]

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

இயேசு அவரிடம், "இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும்.

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார். - [4:19]

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, "அகன்று போ, சாத்தானே, உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது" என்றார். - [4:10]

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

"மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்" மறைநூலில் எழுதியுள்ளதே" -

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

"'கண்ணுக்குக் கண்', ' பல்லுக்குப் பல்' என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டுவிடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள். - [5:38 முதல் 42 வரை]

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள்.எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

"பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும். உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? அல்லது அவரிடம்,"உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?" என்று எப்படிக் கேட்கலாம்? இதோ! உங்கள் கண்ணில்தான் மரக்கட்டை இருக்கிறதே! வெளிவேடக்காரரே, - [7:1 முதல் 5 வரை]

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

"போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். - [7:15]

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

அவர்கள் கடலுக்கு அக்கரையிலிருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகைவிட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால்கூடக் கட்டி வைக்க முடியவில்லை. ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும் அவரை அடக்க இயலவில்லை. அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார். அவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு ஓடிவந்து அவரைப் பணிந்து,"இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்" என்று உரத்த குரலில் கத்தினார். ஏனெனில் இயேசு அவரிடம், "தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ" என்று சொல்லியிருந்தார். அவர் அம்மனிதரிடம், "உம் பெயர் என்ன?" என்று கேட்க அவர், "என் பெயர் 'இலேகியோன்', ஏனெனில் நாங்கள் பலர்" என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாமென்று அவரை வருந்தி வேண்டினார். அங்கே மலைப்பகுதியில் பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. "நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்" என்று தீய ஆவிகள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார்.

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

"உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக", "பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக" எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள் கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

ஏழையின் உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Jesus Christ Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

"என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?' என்பர். அதற்கு நான் அவர்களிடம், 'உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்' என வெளிப்படையாக அறிவிப்பேன். - [7:21 முதல் 23 வரை]

இயேசு கிறிஸ்து
Share on WhatsApp
Books by Jesus Christ

Explore the wisdom of Jesus Christ in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.