கற்றலின் உண்மையான கலை, நாம் திறமையை விஞ்சும்போது, நமது பணி நமது சாராம்சத்தின் வெளிப்பாடாக மாறும்போது நிகழ்கிறது.
ஜோஷ் வைட்ஸ்கின் Share on WhatsApp
கவிதை கண்ணீரால் எழுதப்படுகிறது, புனைகதை இரத்தத்தால், வரலாறு கண்ணுக்குப் புலப்படாத மையால்.
கார்லோஸ் ரூயிஸ் ஸாஃபோன் Share on WhatsApp
ஒரு கலைஞனின் இலக்கு, யாராலும் வெல்ல முடியாத ஒரு தலைசிறந்த படைப்பை உருவாக்குவதே.
ஜார்ஜ் பெர்னார்ட் ஷா Share on WhatsApp
விதிகளின் நுணுக்கங்களை ஒரு வல்லுநர்போல் அறிந்துகொள், அப்போதுதான் அவற்றை ஒரு கலைஞனைப்போல் மீற முடியும்.
பாப்லோ பிக்காசோ Share on WhatsApp
சிற்பி, தேவையற்ற பகுதிகளைச் செதுக்கி, அழகிய சிலையை உருவாக்குகிறான். அது ஒரு நீக்கும் செயல்முறை.
எல்பர்ட் ஹப்பார்ட் Share on WhatsApp
எப்படிப்பட்ட கலையும், ஒழுக்கக்குறைவுக்கும் மூட நம்பிக்கைக்கும் சிறிதும் பயன்படக்கூடாததாய் இருக்க வேண்டும்.
பெரியார் Share on WhatsApp
எவ்வளவு பெரிய கல்வியும், ஒரு கலையாகவும் தொழிலாகவும் போய்விட்டதேயல்லாமல் பகுத்தறிவுக்கு ஒரு சிறிதும் பயன்படுவதாக இல்லை.
பெரியார் Share on WhatsApp
வாழ்வு என்பது, குறைந்த ஆதாரங்களில் இருந்து போதுமான முடிவுகளைக் கண்டடையும் கலை.
சாமுவேல் பட்லர் Share on WhatsApp
நாம் காண எதிர்பாராத ஒன்றைக் காணச் செய்யும் படமே அதன் ஆகப்பெரிய மதிப்பாகும்.
ஜான் டக்கி Share on WhatsApp
ஒவ்வொரு கலைஞனும் தன் தூரிகையைத் தன் ஆன்மாவில் தோய்த்து, தன் இயல்பைத் தன் ஓவியங்களில் தீட்டுகிறான்.
ஹென்றி வார்ட் பீச்சர் Share on WhatsApp