ஒரு பன்றியுடன் எப்பொழுதும் சண்டையிடாதீர்கள். ஏனெனில் நீங்கள் இருவருமே அழுக்காவீர்கள். ஆனால் பன்றி அதை ரசித்துக் கொண்டிருக்கும்.
கேல் யார்பரோ Share on WhatsAppDaily Tamil puzzle
எனக்கு வியட்நாமியர்களோடு எந்த சண்டையும் இல்லை. அவர்கள் யாரும் என்னை கருப்பன் என்று அழைத்தது இல்லை. பத்தாயிரம் மைல்களை கடந்து வெள்ளையின முதலாளிகள் கருப்பு நிறம் கொண்ட மக்களை உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்த அப்பாவிகளை கொன்று, எரிக்க என்னால் செய்ய முடியாது. ஏன் நான் இவர்களை சொல்வதை கேட்டு சீருடை அணிந்து வியட்நாமின் அப்பாவி மக்கள் மீது குண்டுகள் மற்றும் தோட்டாக்களை செலுத்த வேண்டும்? இங்கே என் ஊரில் நீக்ரோ மக்கள் நாய்களை போல நடத்தப்பட்டு, மனித உரிமைகள் மறுக்கப்படுகிற பொழுது நான் ஏன் அங்கே போக வேண்டும்? இந்த தீய அநியாயம் முடிவுக்கு வரவேண்டிய தருணம் இது.
முகம்மது அலி Share on WhatsApp