இந்திய தேசிய ஒருமைப்பாட்டை உண்மையிலேயே விரும்பும் தமிழர் எவரும் இந்தி மொழியில் ஞானம் பெற வேண்டியதின் அவசியத்தை மறுப்பதற்கில்லை.
ம. பொ. சிவஞானம்
என்னைச் சிலப்பதிகாரத்துக்கு இழுத்தவர் பாரதியார். அதுபோலவே என்னைக் கீதைக்கு இழுத்தது காந்தியின் ‘அனாசக்தி யோகம’ என்ற புத்தகம். (14-1-1962)
ம. பொ. சிவஞானம்
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மதத்தால் இந்துக்களாக இருப்பார்களானால்... அவர்கள் தங்கள் வேத மொழியான சமஸ்கிருதத்தை வெறுப்பது முறையோ, நெறியோ ஆகாது.
ம. பொ. சிவஞானம்
உலகம் என்பது ஒரு திசை மட்டும் தானா? எட்டுத்திசையையும் நான் பார்க்க வேண்டுமானால், ஆங்கில மொழிச்சாளரம் ஒன்று மட்டும் போதுமா? ஒரு வீட்டுக்கு ஒரே ஜன்னல் இருப்பது வழக்கமில்லையே.
ம. பொ. சிவஞானம்
பள்ளிக்கூடம் ஒரு சிறைச்சாலை, பயங்கரமான இடம் என்ற நினைப்பு பிள்ளைகளுக்கு ஏற்படக் கூடாது. நமது தமிழகத்தில் மறுபடி ஒரு அவ்வையார், ஒரு ஆண்டாள் பிறக்காததற்குக் காரணம் கடந்த 300 ஆண்டுகளாக உள்ள கல்விமுறைதான்.
ம. பொ. சிவஞானம்
சமயத்துறையில் நானும் பெரியாரும் சந்திக்க முடியாத இருவேறு துருவங்களாக இருந்தோம். அது காரணமாகவே, அவருடைய வாழ்நாள் முழுவதிலும், அவரோடு எந்த நேரத்திலும், எந்த ஒரு பிரச்சினையிலும் நான் ஒன்றூபட்டுச் செயலாற்ற முடியாதவனாக இருந்து வந்தேன்.
ம. பொ. சிவஞானம்
மொழி வேறுபாடுடைய பல்வேறு மாநிலங்களின் மக்கள் பரஸ்பரம் கலந்து பழகி ஒருமைப்பாடு எய்துவதற்கு இந்தி ஒன்றுதான் சிறந்தமொழி என்பதனை என்றுமே நான் மறுத்தது இல்லை.
ம. பொ. சிவஞானம்
தமிழ் மொழியை எனது தாய்மொழியாகக் கருதுகிறேன், அது என் வாழ்க்கை மொழியாக அமைந்துவிட்டதால். 'இந்தியன்' என்ற முறையிலே, 'இந்து' என்ற வகையிலே சமஸ்கிருதம் எனது கலாச்சார மொழியாக இருந்து வருகிnறது.
ம. பொ. சிவஞானம்
மந்திரங்களைக் கொண்ட மொழியாதலால், அதனைத் தேவமொழி என்று சொல்வது வழக்கமாகி விட்டது. இதை, தெய்வபக்தியும் மதப்பற்றும் உடைய இந்துக்கள் மறுத்து வாதிடத் தேவையில்லை.
ம. பொ. சிவஞானம்
சுமார் 290 கோடி மக்களைக் கொண்ட உலகத்தில், ஆங்கில மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோர் 26 கோடி பேர்தான். ஆங்கிலமல்லாத மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டோர் 264கோடியாவர். இந்தக் கணக்கைப் பார்த்த பிறகும், ஆங்கிலத்தை உலக மொழி என்று சொல்வது அறிவுடைமை ஆகுமா?
ம. பொ. சிவஞானம்
குழந்தைக்குப் பால் கொடுப்பதில் இருவகை தாய்மார்கள் உண்டு. நினைத்து பால் ஊட்டும் தாய் ஒருவகை. அழுத பிள்ளைக்குப் பால் கொடுக்கும் தாய் இன்னொருவகை. தாய்மொழி விஷயத்தில் அழுதப் பிள்ளைக்குப் பால் கிடைக்கும் நிலை இருக்கிறது. அழுதால்தான் பால் கிடைக்கும்.
ம. பொ. சிவஞானம்
ஒரு முறை நான் சென்னை பச்சையப்பன் கல்லூரி ஆண்டு இறுதி விழாவில் உரையாற்றினேன். இந்தச் செய்தியைத் தினமணி பேப்பரில், “ம. பொ. சி. இறுதி உரையாற்றினர்“ என்று போட்டிருந்தார்கள். இது நடந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனால் நான் இன்னும் உரையாற்றிக் கொண்டுதான் இருக்கிறேன்.
ம. பொ. சிவஞானம்
இந்தி எதிர்ப்புக்கு எதிர்ப்புக் காட்டும் அரசியல் பிரச்சாரத்திலே நான் எல்லை கடந்து உற்சாகம் காட்டினேன்.
ம. பொ. சிவஞானம்Explore the wisdom of M. P. Sivagnanam in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.