நமக்குள் அடக்கபடாத உணர்வுகளை நேசிக்கும் தைரியம் ஒரு சிலருக்கு எப்போதும் இருக்கும். அந்த மனிதர்களில் ஒருவர் என் தந்தை.
அலிசன் லோமன் Share on WhatsAppDaily Tamil puzzle
ஒரு தந்தையின் கண்ணீரும் பயமும் கண்ணுக்குத் தெரிவதில்லை, தந்தையின் அன்பு வெளிப்படுத்தப்படாதது, ஆனால் அவருடைய கவனிப்பும் பாதுகாப்பும் வலிமையின் தூணாக நம் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது.
ஆமா எச்.வன்னியாராச்சி Share on WhatsApp
மின்மினிப்பூச்சியை போல நீங்கள் என்னை உணரச் செய்கிறீர்கள். காதல் பசியுடன் கண்ணாடி குடுவையில் அடைபட்ட மின்மினி பூச்சியைப்போல.
ஆயுஷி கோஷல் Share on WhatsApp
திருமணம் உண்மையில் இதயத்தில் நடைபெறுகிறது, வீட்டிலோ கோவிலிலோ அல்ல. அது நீங்கள் தொடர்ந்து எடுக்கும் தொடர் முடிவுகளே. அந்தத் முடிவுகள் உங்கள் கணவன் அல்லது மனைவியை நீங்கள் நடத்தும் விதத்தில் பிரதிபலிக்கிறது.
பார்பரா டி ஏஞ்சலிஸ் Share on WhatsApp
உங்களிடம் காதல் மட்டும் இருந்து காதலிக்கப்படும் தகுதி இல்லாதிருந்தால், காதல் மிகவும் ஆபத்தானது.
டிக் கிரிகோரி Share on WhatsApp
தந்தைக்கு உங்கள் மீதான அன்பை சொல்ல தெரியாது, காட்ட மட்டுமே தெரியும்.
டிமிட்ரி தி ஸ்டோன்ஹார்ட் Share on WhatsApp
ஒரு நல்ல தந்தை தன் மகளின் வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை கொண்டுள்ளார்.
டாக்டர் ஜேம்ஸ் டாப்சன் Share on WhatsApp
நாம் அனைவரும் விநோதமானவர்களே, வாழ்க்கையும் விநோதமானதுதான். நம் விநோதங்களுடன் ஒத்துப்போகும் ஒருவரை காணும்போது ஏற்படுவதே காதல்.
டாக்டர் சியூஸ் Share on WhatsApp
இறுதியாக உங்கள் வாழ்க்கை, கனவைவிட சுகமாய் இருக்கும்போது நீங்கள் காதலிப்பதை அறியலாம்.
டாக்டர் சியூஸ் Share on WhatsApp
உங்களை உண்மையாக அறிந்து நீங்கள் அப்படி இருப்பதற்காக உங்களிடம் அன்பு கொண்டவன் நண்பன்.
எல்பர்ட் ஹப்பார்ட் Share on WhatsApp
எல்லாவற்றையும் சரிப்படுத்த தந்தைகளுக்கு எப்போதும் ஏதோ ஒரு வழி தெரிகிறது.
எரிகா காஸ்பி Share on WhatsApp
நான் அவளை நேசிக்கிறேன், அதுவே அனைத்தின் தொடக்கமும் முடிவும்.
பிரான்சிஸ் ஸ்காட் கீ பிட்ஸ்ஜெரால்ட் Share on WhatsApp
மதுதான் மனிதனின் மிக மோசமான எதிரி, ஆனால் உன் எதிரியிடமும் அன்பு செலுத்து என்கிறது பைபிள் ☻.
ஃபிராங்க் சினாட்ரா Share on WhatsApp
உண்மையான நண்பனைக் கொண்டவன் மகிழ்ச்சியானவன், தன் மனைவியிடம் அந்த உண்மையான நட்பைக் காண்பவன் பெருமகிழ்ச்சியானவன்.
ஃபிரான்ஸ் ஷூபர்ட் Share on WhatsApp
வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சிதான் உள்ளது, அது காதலிப்பதும் காதலிக்கப்படுவதும்தான்.
ஜார்ஜ் சான்ட் Share on WhatsApp
திருமணம் என்னை மிகவும் மகிழ்ச்சியாக ஆக்கியுள்ளது, நான் என் மனைவியை ஆழமாக காதலிக்கிறேன், அவளுக்காக ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.
ஹாரி கானிக், ஜூனியர். Share on WhatsApp
நீ என்னை நினைவில் வைத்திருந்தால், இவ்வுலகமே மறந்தாலும் எனக்கு கவலையில்லை.
அருக்கி முரகாமி Share on WhatsApp
தனியாக வெளிச்சத்தில் நடப்பதை விட நண்பனுடன் இருட்டில் நடப்பது சிறந்தது.
ஹெலன் கெல்லர் Share on WhatsApp
நான் உன்னுடையவன், என்னை என்னிடம் திருப்பி கொடுத்துவிடாதே.
ஜலாலுத்தீன் முகம்மது ரூமி Share on WhatsApp
திருமணத்தின் ஒரு நன்மை என்னவென்றால், நீங்கள் அவருடனான காதலில் இருந்து விலகும்போதோ அல்லது அவர் உங்களிடம் இருக்கும் காதலில் இருந்து விலகும்போதோ, நீங்கள் மீண்டும் காதலிக்கும் வரை அது உங்களை ஒன்றாக வைத்திருக்கும்.
ஜூடித் வியர்ஸ்ட் Share on WhatsApp
மகிழ்ச்சியான திருமணத்தின் ரகசியம் சரியான நபரைக் தேர்ந்தெடுப்பதே. நீங்கள் எப்போதும் அவர்களுடன் இருக்க விரும்பினால் அவர்கள் சொல்வது எப்போதும் சரிதான் என்பது உங்களுக்குத் தெரியும்.
ஜூலியா குழந்தை Share on WhatsApp
திருமணம் என்பது கடவுள் நமக்கு கொடுத்த வரம். மகிழ்ச்சியான திருமண வாழ்வு அவருக்கு நாம் கொடுக்கும் பரிசு.
எல். விட்னி கிளேட்டன் Share on WhatsApp
நாம் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ளாதது போல் வாழ்நாள் முழுவதும் ஒருவரையொருவர் நேசிப்போம் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
பைரன் பிரபு Share on WhatsApp
ஒரு மகிழ்ச்சியின் முழு மதிப்பைப் பெறுவதற்கு, அதைப்பகிர்ந்துகொள்ள யாராவது உங்களிடம் இருக்க வேண்டும்.
மார்க் ட்வைன் Share on WhatsApp
இவ்வுலகில் என்னுடைய இதயம்போல் உனக்கு வேறிடம் இல்லை. என்னுடைய காதல்போல் வேறு காதலில்லை.
மாயா ஏஞ்சலோ Share on WhatsApp
இந்த உலகில் யாராலும் ஒரு பெண்ணை அவளது தந்தையை விட அதிகமாக நேசிக்க முடியாது.
மைக்கேல் ரத்னதீபக் Share on WhatsApp
நல்ல திருமணம் என்று ஒன்று இருந்தால், அதற்கு காரணம் அது காதலை விட நட்பை ஒத்திருப்பதால் தான்.
மைக்கேல் டி மாண்டெய்ன் Share on WhatsApp
ஒரு வெற்றிகரமான திருமண வாழ்விற்கு பலமுறை காதலில் விழுவது அவசியம் ஆனால் ஒரே நபருடன்.
மிக்னான் மெக்லாலின் Share on WhatsApp
காதல் உங்களுடன் வாழ ஒருவரை கண்டுபிடிப்பதல்ல. அவர் இல்லாமல் நீங்கள் வாழமுடியாத ஒருவரை கண்டுபிடிப்பது.
மொண்டனீஸ் ரபேல் ஒர்டிஸ் Share on WhatsApp
நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால் நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்?
அன்னை தெரசா Share on WhatsApp
எப்பொழுதும் ஒருவரை ஒருவர் புன்னகையுடன் சந்திப்போம், ஏனென்றால் புன்னகை அன்பின் ஆரம்பம்.
அன்னை தெரசா Share on WhatsApp
நீங்கள் செல்லும் இடமெல்லாம் அன்பைப் பரப்புங்கள். உங்களிடம் வந்தவர்கள் யாரும் மகிழ்ச்சியின்றி திரும்ப வேண்டாம்.
அன்னை தெரசா Share on WhatsApp
அன்பு என்பது அனைத்து பருவங்களிலும் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு பழம்
அன்னை தெரசா Share on WhatsApp
வறுமை என்பதுஉண்ண உணவின்றி, உடுத்த துணியின்றி, வசிக்க வீடின்றி இருப்பது மட்டுமே என்று சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். யாருக்கும் தேவைப்படாமல், யாராலும் விரும்பப்படாமல், யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதே வறுமையிலும் மிகப்பெரிய வறுமை.
அன்னை தெரசா Share on WhatsApp
பணம் மட்டும் கொடுத்து திருப்தி அடைய வேண்டாம். பணம் மட்டும் போதாது, அவர்கள் நேசிக்கப்பட உங்கள் இதயம் அவர்களுக்கு தேவை. எனவே, நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்கள் அன்பைப் பரப்புங்கள்.
அன்னை தெரசா Share on WhatsApp
செல்வந்தர்கள் பணம் கொடுத்து பெறக்கூடியதை ஏழைகளுக்கு, அன்பிற்காக கொடுக்க முயற்சிக்கிறேன். தொழுநோயாளியை பணத்திற்காக நான் தொடுவதில்லை; கடவுளின் அன்பிற்காக நான் அவர்களை மனமுவந்து குணப்படுத்துகிறேன்.
அன்னை தெரசா Share on WhatsApp
இன்றைய மிகப்பெரிய நோய் தொழுநோயோ காசநோயோ அல்ல, மாறாக யாருக்கும் தேவையற்றர் என்ற உணர்வே.
அன்னை தெரசா Share on WhatsApp
பணக்காரர்கள் கூட அன்பிற்காகவும், கவனிப்பதற்காகவும், விரும்பப்படுவதற்காகவும், சொந்தம் என்று அழைக்கப்படுபவதற்கும் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.
அன்னை தெரசா Share on WhatsApp
காதல் என்பது காற்றைப் போன்றது, அதை உங்களால் பார்க்க முடியாது ஆனால் உணர முடியும்.
நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ் Share on WhatsApp
சிறந்த காதல் என்பது ஆன்மாவை எழுப்பி மென்மையாக்குவது, இதயத்தில் ஒரு தீயையும் மனதிற்கு அமைதியையும் கொடுப்பது.
நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ் Share on WhatsApp
நாம் தனியாக பிறந்தோம், தனியாக வாழ்கிறோம், தனியாக சாகிறோம். காதல் மற்றும் நட்பின் மூலம் மட்டுமே நாம் தனியாக இல்லை என்ற மாயையை உருவாக்க முடியும்.
ஆர்சன் வெல்லஸ் Share on WhatsApp
பெண்கள் அன்பு செலுத்தப்பட வேண்டியவர்கள், புரிந்து கொள்ளப்பட வேண்டியவர்கள் அல்ல
ஆஸ்கர் வைல்ட் Share on WhatsApp
நீங்கள் ஒரு பூவை நேசித்தால், அதை பறிக்க வேண்டாம், ஏனெனில் நீங்கள் அதை பறித்தால், அது இறந்துவிடும், உங்களுக்கு அதன் மீதான ஆசையும் முடிந்துவிடும். எனவே நீங்கள் ஒரு பூவை நேசித்தால், அதை அப்படியே விட்டுவிடுங்கள். அன்பு என்பது உடைமையாக்கிகொள்வது பற்றியது அல்ல, அன்பு என்பது அப்படியே ஏற்றுக்கொள்வது.
ஓஷோ Share on WhatsApp
அன்பில் தேவைகள் இல்லை, ஆசைகள் இல்லை, எதிர்பார்ப்புகள் இல்லை. அன்பில் அன்பு மட்டுமே உள்ளது அப்படிப்பட்ட அன்பில்தான் அதில்தான் மகிழ்ச்சி பொங்கும்.
ஓஷோ Share on WhatsApp
காதல் என்பது கட்டுக்கடங்காத சக்தி. அதைக் கட்டுப்படுத்த முயலும்போது நம்மை அழிக்கிறது. சிறைப்படுத்த முயலும்போது நம்மை அடிமைப்படுத்துகிறது. புரிந்து கொள்ள முயலும்போது, நம்மைத் தொலைத்து, குழப்பமடையச் செய்கிறது.
பாலோ கோயல்ஹோ Share on WhatsApp
நீங்கள் திருமணம் செய்து கொள்ளத் தேர்ந்தெடுக்கும் நபர் உங்கள் வாழ்க்கையிலும், திருமணத்திற்க்கு பிறகும் நீங்கள் எடுக்கும் முடிவுகளிலும் பெரும் செல்வாக்கு செலுத்தகூடியவர்.
பீட்டர் கெய்ன் Share on WhatsApp
உங்கள் திருமணம் ஒரு புனித பந்தம் ஆனால் அதை எளிதென கருதாதீர்கள். எல்லா உறவுகளையும் போலவே அதை காக்க நீங்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும்.
ரேமண்ட் ஈடோ Share on WhatsApp
யாராவது உங்களை காதலிக்கும்வரை நீங்கள் யார் அல்லது எப்படி இருக்கிறீர்கள் என்பது பொருட்டல்ல.
ரோல்ட் டால் Share on WhatsApp
காதல் என்பது கட்டுப்படாமல் இருப்பதற்கான கட்டுப்படுத்த முடியாத ஆசை.
இராபர்ட் புரொஸ்ட் Share on WhatsApp
உங்கள் தாயின் அன்புக்கு உங்களுக்கு தகுதி தேவையில்லை. ஆனால் தந்தைக்கு அப்படியல்ல.
இராபர்ட் புரொஸ்ட் Share on WhatsApp
ஒரு தந்தைக்கு மகள், அவரின் சுவாசத்திற்கு சற்றும் குறைவில்லை.
சச்சின் ராம்தாஸ் பாரதியா Share on WhatsApp
காதலில் விழுவது மெழுகுவர்த்தியைப் கையில் வைத்திருப்பதை போன்றது. தொடக்கத்தில் அது உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஒளிரச் செய்கிறது. பின்னர் உருக ஆரம்பித்து உங்களை காயப்படுத்துகிறது. இறுதியாக எல்லாம் இருட்டாகி, காயம் மட்டும் மிஞ்சுகிறது!
சையத் அர்ஷத் Share on WhatsApp
உங்களுக்கு ஒரு உண்மையான நண்பன் இருந்தால், உங்கள் பங்கை விட நீங்கள் பெறுவதே அதிகம்.
தாமஸ் புல்லர் Share on WhatsApp
நீங்கள் இருவரும் எவ்வளவு சவால்களை எதிர்கொண்டாலும், உங்கள் இருவருக்கும் திருமணத்தின் மீதும், ஒருவருக்கு ஒருவர் மீதும் நம்பிக்கை இருந்தால் அதைச் கடந்துவிட முடியும்.
டைலர் கிரீன் Share on WhatsApp
எனக்கு இளவரசன் இருப்பதால் நான் இளவரசியல்ல, என் தந்தை அரசர் என்பதால் நான் இளவரசி.
தெரியவில்லை Share on WhatsApp
இனிய திருமண வாழ்க்கை என்பது குறைகளுள்ள இரண்டு மனிதர்கள் என்ன நடந்தாலும் விட்டுக் கொடுக்காமல் காதலுடன் இருப்பது.
தெரியவில்லை Share on WhatsApp
இங்கு தெரியாதவர்கள் என்று யாரும் இல்லை, சந்திக்காத நண்பர்கள் மட்டுமே உண்டு.
வில்லியம் பட்லர் யீட்ஸ் Share on WhatsApp
காதலிக்கலாமா என்று சிந்திப்பவர்கள், சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள், தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி.
யுகியோ மிஷிமா Share on WhatsApp
காதலிக்கும் ஒரு மனிதன் திருமணம் ஆகும் வரை முழுமையடையாதவன். ஆன பின் அவன் கதை முடிந்தது.
ஸா ஸா கபோர் Share on WhatsApp