நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காத மனிதன் பிணத்திற்கு சமமாவான்.
எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல, ஏதேனும் சிறப்பான ஆற்றலும் இருக்கவே செய்யும்.
திட்டம் மக்கள் திட்டமாக இருக்க வேண்டும். அத்துடன் மக்களின் ஒத்துழைப்பும் வேண்டும்; மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றி பெற முடியாது.
சுதந்திரம் என்றால் பயமில்லாமல் வாழ்வதுதான். பயமில்லாமல் வாழ நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.
நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும். இவையிரண்டும் போனாலன்றி, நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது.
சில சமயம் முட்டாளாய் காட்சியளிப்பது அறிவுள்ள செயல்.
பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பலம் பெறுபவர்களே பதவிக்கு வரமுடியும். மக்களின் ஆதரவின்றி ஒருநாள் கூட ஆட்சியில் நீடிக்க முடியாது.
உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.
நூறு அறிவாளிகளுடன் மோதுவதைவிட, ஒரு மூடனோடு மோதுவது மிகவும் சிரமமானது.
எல்லாம் போய்விட்டாலும் வலிமையான உள்ளமிருந்தால், உலகத்தையே கைப்பற்றலாம்.
சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காவே உருவாக்கப்பட்டவை, சட்டத்துக்காகவும் விதி முறைகளுக்காகவும் மக்கள் இல்லை.
ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது ஒரு குடும்பத்திற்கே கல்வி தருவதாகும்.
படித்த ஜாதி,படிக்காத ஜாதி என்றொரு பிரிவு உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நேரம் தவறாமை எனும் கருவியை உபயோகிப்பவன், எப்போதுமே கதாநாயகன்தான்.
பிறர் உழைப்பை தன் சுயநலத்திற்காக பயன்படுத்துவதே.. உலகின் மிகவும் கேவலமான செயலாகும்.
நாம் எதைச் செய்தாலும், எதற்காக செய்கிறோம் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும்.
இலட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும். பலாத்கார புரட்சி தேவையில்லை!
சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை கல்வியும் உழைப்புமே போதுமானது.
அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும்போது, அது கோழிச்சண்டையை பார்ப்பதுபோல மக்களுக்கு வேடிக்கையாக உள்ளது.
சுதந்திரமான வாழ்க்கை என்பது யாருக்கும், எதற்கும் கட்டுப்படாத வாழ்க்கையென்று பொருள் அல்ல, பிறரிடம் எதையும் எதிர்பார்த்து யாசிக்காத வாழ்க்கையே சுதந்திரமான வாழ்க்கை.
கடுமையான உழைப்பே மக்களை வறுமையிலிருந்து மீட்கும். சமதர்ம சமுதாயம் மலர, வன்முறை தேவையில்லை. கல்வியும் உழைப்புமே போதுமானது.