அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
சுப்ரமணிய பாரதி Share on WhatsAppDaily Tamil puzzle
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? - என்றும் ஆரமுது உண்ணுதற்கு ஆசைகொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்து வாரோ?
சுப்ரமணிய பாரதி Share on WhatsApp
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்.
சுப்ரமணிய பாரதி Share on WhatsApp
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
சுப்ரமணிய பாரதி Share on WhatsApp
விடுதலை ! விடுதலை ! விடுதலை ! பறைய ருக்கும் இங்கு தீயர், புலைய ருக்கும் விடுதலை, பரவ ரோடு குறவ ருக்கும் மறவ ருக்கும் விடுதலை!
சுப்ரமணிய பாரதி Share on WhatsApp
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்.
சுப்ரமணிய பாரதி Share on WhatsApp
ஆழ்ந்த நினைப்பு, அசையாத நினைப்பு, வலிய நினைப்பு, மாறாத நினைப்பு விரைவில் உலகம் அறியத்தக்க வெளியுண்மையாக மாறிவிடும்.
சுப்ரமணிய பாரதி Share on WhatsApp
இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை.
சுப்ரமணிய பாரதி Share on WhatsAppExplore the wisdom of Subramania Bharati in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.