மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன.
முகம்மது நபி
தனது சமூகத்தார் இன்னொரு சமூகத்தின் மீது கொடுமை புரியும் போது, அதற்குத் துணை புரிவதுதான் இனவெறியாகும்.
முகம்மது நபி
நெருப்பு விறகைத் தின்பது போல கபடமும், பொறாமையும் நன்மைகளைத் தின்றுவிடும்.
முகம்மது நபி
உங்களில் பலசாலி யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? கோபம் வரும் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவரே பலசாலியாவார்.
முகம்மது நபி
தீமையை எங்கு கண்டாலும், உன் கரங்களால் தடு. இயலவில்லையா, உன் வாய்ச் சொல்லால் தடு. அதுவும் இயலவில்லையா, உன் மனத்தாலாவது அதை வெறுத்தி விலகிச் செல்.
முகம்மது நபி
உங்கள் குடும்பத்திற்கு யார் சிறந்தவரோ அவர் தான் உங்களில் சிறந்தவர். நான் என் குடும்பத்திற்கு சிறந்தவராக இருக்கிறேன்.
முகம்மது நபி
தொழுகை முஸ்லீம்களின் முக்கியக் கடமை. தொழுகை சுவர்க்கத்தின் திறவுகோல்.
முகம்மது நபிExplore the wisdom of Muhammad in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.