இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்த நிலை பெருமளவில் மாறிவிடவில்லை. உலகம் இத்தனை முன்னேறியும் இன்னமும் எங்கள் (இசுலாமிய) சமூகத்துப் பெண்கள் பல நூற்றாண்டுகள் பினதங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவர்களது பிரச்னைகளை பேசாமல் வேறு எதை நான் பேசுவது.
சாரா அபூபக்கர்
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தானே வலி தெரியும். அவர்களால் தானே உண்மையை ஒப்பனையின்றி வெளிப்படுத்த முடியும்.
சாரா அபூபக்கர்
எழுத்து என்பது சமூகத்தின் கண்ணாடியாக, அதன் சாதக பாதக அம்சங்களைப் பிரதிபலிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். சராசரி இலக்கிய அளவுகோல் சட்டகங்களில் என்னுடைய எழுத்து அடைபடுவதை நான் விரும்பவில்லை.
சாரா அபூபக்கர்
நவீன கல்வி முறை எந்த விதத்திலும் இசுலாமியச் சமூகத்தை முன்னேற்றவில்லை. பதிலாக பர்தா அணிவது போன்ற பிற்போக்கான நடவடிக்கைகளை நம் சமூகத்தில் படித்த பெண்களே தொடர்வதற்குத்தான் அது வழி செய்திருக்கிறது.
சாரா அபூபக்கர்Explore the wisdom of சாரா அபூபக்கர் in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.