இந்து சமுதாயம் சமத்துவத்தின் அடிப்படையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றால் ஜாதி அமைப்பு அகற்றப்பட வேண்டும் என்பதை சொல்லத் தேவையில்லை. தீண்டாமையின் வேர்கள் சாதி அமைப்பின் வேரிலேயே உள்ளது. பிராமணர்கள் சாதி அமைப்புக்கு எதிராக எழுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மேலும் நாம் ப்ராமணரல்லாதவர்களை நம்பி நமது போரை அவர்களிடம் ஒப்படைக்கவும் முடியாது.
அம்பேத்கர் Share on WhatsAppDaily Tamil puzzle
எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை, நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களின் உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.
அம்பேத்கர் Share on WhatsApp
தீண்டாமை என்பதே சாதி காரணமாக ஏற்பட்டதே தவிர, அதற்கு வேறு காரணமே ஆதாரமே இல்லை. சாதியை வைத்துக்கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பது சிறிதும் அறிவுடைமையாகாது.
பெரியார் Share on WhatsApp