சமூகம் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: பசியைவிட அதிக உணவும், உணவைவிட அதிக பசியும் கொண்டவர்கள்.
நிகோலஸ் சாம்ஃபோர்ட் Share on WhatsApp
காக்கையும் குருவியும் எங்கள் இனம் – விரிந்த கடலும் மலையும் எங்கள் கூட்டம்.
சுப்பிரமணிய பாரதியார் Share on WhatsApp
ஒவ்வொருவருக்கும் தங்கள் முடிவுகளை எடுக்கும் உரிமை உண்டு, ஆனால் எவருக்கும் தங்கள் முடிவை மற்றவர் மீது திணிக்கும் உரிமை இல்லை.
அய்ன் ராண்ட் Share on WhatsApp
உன் உணர்வுகளுக்கு முன் பிறர் உரிமைகளையும், உன் உரிமைகளுக்கு முன் பிறர் உணர்வுகளையும் கருது.
ஜான் வுட்டன் Share on WhatsApp
நாம் அமைதியாக்கப்படும்போதே, நம் குரல்களின் முக்கியத்துவத்தை உணர்கிறோம்.
மலாலா யூசஃப்சாய் Share on WhatsApp
பெற்ற சுதந்திரம் பேணி பாதுகாக்கப்பட நாம் அனைவரும் சாதி, மத, இன பேதங்கள் கடந்து ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்பதை நமக்கு இந்த சுதந்திர திருநாள் உணர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த உணர்வோடு தமிழக மக்கள் அனைவருக்கும் தமது இதயம் கனிந்த சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்கள்.
மு. கருணாநிதி Share on WhatsApp
இங்கு உயர்ந்தோர் தாழ்ந்தோர் யாருமில்லை அனைவரும் சமமும் இல்லை ஒவ்வொருவரும் தனித்தன்மையுடைய ஒப்பீடற்றவர்கள் நீங்கள் நீங்கள்தான், நான் நான்தான்.
ஓஷோ Share on WhatsApp
இந்தியா இந்துக்களின் நாடு மட்டுமல்ல. இது முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகளின் என அனைவருக்குமான நாடு.
மதன் மோகன் மாளவியா Share on WhatsApp
எனது நாட்டுப்பற்று எனது நாட்டுக்கு மட்டுமே உரித்தானதல்ல. அது பிற நாடுகளுக்கான மதிப்பையும் உள்ளடக்கியது. பிற தேசியங்கள் துன்பத்துக்குள்ளாகவும், ஒடுக்கப்படவும் என் தேசபக்தி பயன்படுமானால் அதை நான் நிராகரிக்கிறேன்.
மகாத்மா காந்தி Share on WhatsApp
ஒரு ஆண் தன் வீட்டு பெண்களையே சமமாக நினைப்பதில்லை. தன் மகனுக்கும் மகளுக்குமே சம உரிமை இல்லை. தன் குடும்பத்திலிருக்கும் அடக்குமுறையை, அதிகாரத்தை, ஆண்/பெண் வேறுபாட்டை, முதலாளித்துவ/நிலவுடைமை பண்பை அழித்து சாதி ஒழிப்பை தொடங்குங்கள். இத்தகைய பண்புகளை மார்க்சிடமிருந்தும், அம்பேத்கரிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. சாதியின் வடிவம் வேறு வேறாக இருப்பதை கண்டறிந்து, அந்த வடிவம் குடும்பமாக இருப்பதை ஒத்துக்கொண்டு, அந்த குடும்பத்தை சீர்படுத்தும் வேலையை நாம் இன்றிலிருந்து தொடங்குவோம்.
பா ரஞ்சித்
பார்ப்பனர்கள் மனிதர்களாக இருக்கட்டும்; தேவர்களாக இருக்க வேண்டாம் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.
பெரியார் Share on WhatsApp
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி, இவ் வையம் தழைக்குமாம்.
சுப்ரமணிய பாரதி Share on WhatsApp
ஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே.
பாரதிதாசன் Share on WhatsApp
கல்வி அமைப்பின் சுவர்கள் தகர்க்கப்பட வேண்டும். கல்வி என்பது பணம் படைத்தவர்ளின் உரிமையாக இருக்கக்கூடாது.
சேகுவேரா Share on WhatsApp
என் மனிதநேயம் உன்னுடன் பிணைந்துள்ளது, ஏனென்றால் நாம் ஒன்றாகவே மனிதர்களாக இருக்க முடியும்.
டெஸ்மண்ட் டூட்டு Share on WhatsApp
யாரும் உயர்ந்தவர் இல்லை, யாரும் தாழ்ந்தவர் இல்லை, ஆனால் யாரும் சமமானவரும் இல்லை. மனிதர்கள் தனித்துவமானவர்கள், ஒப்பிட முடியாதவர்கள். நீ நீயே, நான் நானே.
ஓஷோ Share on WhatsApp
நம் நாட்டுக்கு சுதந்திரம் தேவை, ஆனால் பிறர் சுரண்டபடுவதின் மூலம் அது நமக்கு கிடைக்க தேவையில்லை.
ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
சுயமரியாதை என்பது பிறப்புரிமை. அதை யாருக்கும் விட்டுக்கொடுக்கக் கூடாது.
பெரியார் ஈ. வெ. இராமசாமி Share on WhatsApp
சூரியன் நல்லவர் மீதும் கெட்டவர் மீதும் சமமாகப் பிரகாசிக்கிறது.
ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் Share on WhatsApp
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.
சுப்ரமணிய பாரதி Share on WhatsApp
நீங்கள் செய்யத் தயாராக இல்லாத ஒன்றை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது நியாயமில்லை.
எலினோர் ரூஸ்வெல்ட் Share on WhatsApp
உலகின் தீமைகளை நம்மால் தடுக்க முடியாமல் போகலாம். ஆனால், ஒருவருக்கொருவர் நாம் நடந்து கொள்ளும் விதம் முற்றிலும் நம் கையில் உள்ளது.
பராக் ஒபாமா Share on WhatsApp