உங்கள் அனுமதியின்றி, யாரும் உங்களைத் தாழ்வாக உணரச் செய்ய முடியாது.
எலினோர் ரூஸ்வெல்ட் Share on WhatsApp
நானே என் ஊற்றுக்கண். நான் நன்கு அறிந்த பொருள் நான். நான் இன்னும் அறிய விரும்பும் பொருள்.
ஃப்ரிடா காலோ Share on WhatsApp
பெண்கள் சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முழுமையாக பங்கேற்க வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்
ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
ஒரு ஆண் தன் வீட்டு பெண்களையே சமமாக நினைப்பதில்லை. தன் மகனுக்கும் மகளுக்குமே சம உரிமை இல்லை. தன் குடும்பத்திலிருக்கும் அடக்குமுறையை, அதிகாரத்தை, ஆண்/பெண் வேறுபாட்டை, முதலாளித்துவ/நிலவுடைமை பண்பை அழித்து சாதி ஒழிப்பை தொடங்குங்கள். இத்தகைய பண்புகளை மார்க்சிடமிருந்தும், அம்பேத்கரிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. சாதியின் வடிவம் வேறு வேறாக இருப்பதை கண்டறிந்து, அந்த வடிவம் குடும்பமாக இருப்பதை ஒத்துக்கொண்டு, அந்த குடும்பத்தை சீர்படுத்தும் வேலையை நாம் இன்றிலிருந்து தொடங்குவோம்.
பா ரஞ்சித்
சீர்திருத்த மனம் படைத்த அறிவுள்ள பெண்களிடமிருந்துதான் சீர்திருத்த அறிவுள்ள செம்மல்கள் தோன்றக்கூடும்.
பெரியார் Share on WhatsApp
பெண்கள் அன்பு செலுத்தப்பட வேண்டியவர்கள், புரிந்து கொள்ளப்பட வேண்டியவர்கள் அல்ல
ஆஸ்கர் வைல்ட் Share on WhatsApp
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி, இவ் வையம் தழைக்குமாம்.
சுப்ரமணிய பாரதி Share on WhatsApp
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்.
சுப்ரமணிய பாரதி Share on WhatsApp
பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே.
பாரதிதாசன் Share on WhatsApp
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.
சுப்ரமணிய பாரதி Share on WhatsApp