நீங்கள் ஒரு பூவை நேசித்தால், அதை பறிக்க வேண்டாம், ஏனெனில் நீங்கள் அதை பறித்தால், அது இறந்துவிடும், உங்களுக்கு அதன் மீதான ஆசையும் முடிந்துவிடும். எனவே நீங்கள் ஒரு பூவை நேசித்தால், அதை அப்படியே விட்டுவிடுங்கள். அன்பு என்பது உடைமையாக்கிகொள்வது பற்றியது அல்ல, அன்பு என்பது அப்படியே ஏற்றுக்கொள்வது.
ஓஷோ Share on WhatsApp
உன்னிடம் உள்ளதற்கு இப்பொழுதே நன்றியுடன் இரு, எதையும் சாதாரணமாகக் கருதாதே.
ராய் டி. பென்னட் Share on WhatsApp
எந்த ஒன்றையும் அழிந்து போகக்கூடும் என உணரும்போதுதான், அதன் மீதான அன்பு வளரும்.
கில்பர்ட் செஸ்டர்டன் Share on WhatsApp
எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக்கொள்கிறோம். எனவே, யாரையும் தூற்றுவதற்கும் ஒருவருமில்லை; பாராட்டுவதற்கும் ஒருவருமில்லை. காற்று வீசியபடி இருக்கிறது. பாய்மரங்களை விரித்துக் காற்றை பயன்படுத்திக்கொள்ளும் கப்பல்கள் தங்கள் வழியே முன்னேறிச் செல்கின்றன. ஆனால் பாய்களை சுருட்டி வைத்துள்ள கப்பல்கள் காற்றை ஏற்றுப் பயன் பெறுவதில்லை. இது காற்றினுடைய குற்றமாகுமா?
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
நீங்கள் மதிக்கப்படவில்லை, போற்றப்படவில்லை என உணர்ந்தால், நீங்கள் மதிக்கப்பட்டு, போற்றப்படும் இடங்களுக்கு உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.
செலஸ்டைன் சுவா Share on WhatsApp
ஒவ்வொரு பயணிக்கும் ஒரு வீடு உண்டு, அவன் அலைந்து திரிவதால் அதைப் பாராட்டுவதைக் கற்றுக்கொள்கிறான்.
சார்லஸ் டிக்கன்ஸ் Share on WhatsApp
சில சமயங்களில், ஒரு பொருளின் மதிப்பை நீ அறியமாட்டாய், அது நினைவாக மாறும் வரை.
டாக்டர் சியூஸ் Share on WhatsApp