சுதந்திரம் என்றால் பயமில்லாமல் வாழ்வதுதான். பயமில்லாமல் வாழ நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.
காமராசர் Share on WhatsApp
பற்றிக்கொண்டிருக்கும் வலி விட்டுவிடும் பயத்தைவிடப் பெரிதாகும்போது மாற்றம் நிகழ்கிறது.
ஸ்பென்சர் ஜான்சன் Share on WhatsApp
துணிச்சல் என்பது, தனது பிரார்த்தனைகளைச் சொல்லி, எப்படியும் முன்னோக்கிச் செல்லத் துணிந்த அச்சம்.
ஜாய்ஸ் மேயர் Share on WhatsApp
அச்சத்தையும் கோபத்தையும், அவற்றின் பொருள் அறியாமல் நீக்க முயன்றால், அவை வலுப்பெற்று மீண்டும் வரும்.
தீபக் சோப்ரா Share on WhatsApp
மிகவும் பயங்கரமான தருணம், எப்போதும் தொடங்குவதற்கு முன்புதான். அதற்குப் பிறகு, எல்லாம் மேம்படும்.
ஸ்டீபன் கிங் Share on WhatsApp
கோழைக்கு மாற்றம் ஒரு பயம், செல்வந்தனுக்கு மாற்றம் ஒரு அச்சுறுத்தல், நம்பிக்கையாளனுக்கு மாற்றம் ஒரு வாய்ப்பு.
நிடோ குபீன் Share on WhatsApp
ஒன்று உன்னை எவ்வளவு அச்சுறுத்துகிறதோ, அவ்வளவு அதிகமாக அதை நீ செய்ய வேண்டும்.
மார்க் மேன்சன் Share on WhatsApp
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.
ஹென்றி ஃபோர்டு Share on WhatsApp
எல்லா அரசுகளும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தலைமைப் பொறுப்பில் நியமித்துவிட்டு, அச்சமூகத்தின் குரலை ஒடுக்க நினைக்கின்றனர். ஆனால் அதை நடக்க விடமாட்டேன்.
ஜோயிதா மொண்டல் Share on WhatsApp
தோற்றுவிடுவோமோ என்ற பயம், வெல்லப்போகிறோம் என்ற உற்சாகத்தைவிட பெரிதாக இருக்க விடாதே.
ராபர்ட் கியோசாகி Share on WhatsApp
நம்பிக்கை ஒரு உத்தியல்ல. அதிர்ஷ்டம் ஒரு காரணியல்ல. பயம் ஒரு தெரிவல்ல.
ஜேம்ஸ் கேமரூன் Share on WhatsApp
நம் எதிரி பயமே. வெறுப்பை நாம் எதிரியாக நினைக்கிறோம், ஆனால் உண்மையில் பயமே எதிரி.
மகாத்மா காந்தி Share on WhatsApp
ஒரு மகாராணியப் போல சிந்தியுங்கள். ஒரு மகாராணி தோல்வியைக் கண்டு அஞ்சுவதில்லை. தோல்வி என்பது வெற்றியின் மற்றொரு படி.
ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
உலகின் மிகப்பெரிய பயம், பிறர் என்ன நினைப்பார்கள் எனும் பயமே, அந்த பயத்தை கடக்கும் தருணம் முதல், இனி நீங்கள் ஆடு அல்ல, சிங்கம்.
ஓஷோ Share on WhatsApp
உங்கள் அச்சங்களை கொண்டு அல்ல, உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் ஏமாற்றங்களைப் பற்றி அல்ல, உங்களின் கூர்மைப்படுத்தாத திறனைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் எதை முயற்சி தோற்றீர்கள் என்பதைப் பற்றி அல்லாமல், இன்னும் உங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
போப் ஜான் XXIII
உங்களுக்கு பயம் இல்லையென்றால் என்ன செய்துகொண்டிருப்பீர்கள் என யோசியுங்கள்.
ஷெரில் சாண்ட்பர்க் Share on WhatsApp
நோக்கம் எது என்பதை முதலில் தீர்மானி. அதுவே இலக்கு என்பதை உறுதிசெய்து கொள். கையில் பணம் இல்லையே, உடலில் வலு இல்லையே, உதவி செய்ய நண்பர்கள் இல்லையே என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே! எதற்கும் பயப்படாதே, தயங்காதே. இலக்கை நோக்கி அடியெடுத்து வை. தொடர்ந்து முன்னேறு, சோதனைகள் விலகும். பாதை தெளிவாகும். நோக்கத்தை அடைந்தே தீருவாய்! அதை யாராலும் தடுக்க முடியாது.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
ஒருபோதும் 'முடியாது' எனச் சொல்லாதே, ஏனெனில் எல்லைகளும், அச்சங்களும் பெரும்பாலும் வெறும் மாயையே.
மைக்கேல் ஜோர்டன் Share on WhatsApp
நாம் தகுதியற்றவர்கள் என்பதல்ல நம் ஆழமான பயம். அளவற்ற சக்தி கொண்டவர்கள் என்பதே நம் ஆழமான பயம். நம் இருள் அல்ல, நம் ஒளிதான் நம்மை அதிகம் அச்சுறுத்துகிறது.
மரியான் வில்லியம்சன் Share on WhatsApp
நம்பிக்கை மட்டும்தான் பயத்தைவிட வலிமையானது. நம்பிக்கை கொள்ளுங்கள். வெற்றி பெறுங்கள்.
டேல் கார்னகி Share on WhatsApp
மரண பயம் என்பது முடிவின்மைக்கு அடிபணிவதே. உயிருடன் இருக்கும்போதே முடிவின்மையில் வாழக் கற்றுக்கொள், அப்போது மரண பயம் மறையும்.
ஆதி டா சாம்ராஜ் Share on WhatsApp
பயத்தை வெல்ல விரும்பினால், வீட்டில் உட்கார்ந்து அதைப் பற்றி சிந்தித்து கொண்டே இருந்தால் போதாது. வெளியே வந்து செயலில் இறங்க வேண்டும்.
டேல் கார்னகி Share on WhatsApp
சந்தேகத்தையும் அச்சத்தையும் வென்றவர்கள், தோல்வியையும் வென்றவர்கள் ஆவர்.
ஜேம்ஸ் ஆலன் Share on WhatsApp
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
சுப்ரமணிய பாரதி Share on WhatsApp
அச்சப்படுவதைத் தவிர்க்க, மனிதன் அடையும் தூரம், விரும்பியதை அடைவதைக் காட்டிலும் மிக அதிகம்.
டான் பிரவுன் Share on WhatsApp
பயத்தை நேருக்கு நேர் சந்திக்கும் ஒவ்வொரு அனுபவத்தாலும் வலிமை, தைரியம் மற்றும் தன்னம்பிக்கை பெறுகிறீர்கள்.
எலினோர் ரூஸ்வெல்ட் Share on WhatsApp
அச்சமின்மை அன்று துணிவு; அச்சத்தை வெல்வதே துணிவு என உணர்ந்தேன். பயப்படாதவன் வீரன் அல்ல, பயத்தை வென்றவனே வீரன்.
நெல்சன் மண்டேலா Share on WhatsApp
அச்சம், ஐயம், இடர்கள் ஆகியவையே உன் வளர்ச்சிக்கு வழிகாட்டும் திசைகாட்டிகள்.
செலஸ்டைன் சுவா Share on WhatsApp
பயத்திற்கு இரு பொருள்கள் உண்டு: 'எல்லாவற்றையும் மறந்து ஓடு' அல்லது 'எல்லாவற்றையும் எதிர்கொண்டு எழு'. தேர்வு உன் கையில்.
ஜிக் ஜிக்லர் Share on WhatsApp
நாம் இறக்கப்போகிறோம் என்பதை நினைவில் கொள்வது, இழப்பதற்கு ஏதோ இருக்கிறது என்ற வலையில் சிக்குவதைத் தவிர்க்க நான் அறிந்த சிறந்த வழி.
ஸ்டீவ் ஜாப்ஸ் Share on WhatsApp
நம்மில் பலர், தங்கள் பயத்திலேயே வாழ்வதால், தங்கள் கனவுகளை வாழ்வதில்லை.
லெஸ் பிரவுன் Share on WhatsApp
அச்சத்திலிருந்து ஓடும் ஒருவன், அதை விரைவாகச் சந்திக்கவே ஒரு குறுக்குவழியைத் தேர்ந்தெடுத்ததாக பின்னர் அறியலாம்.
ஜே.ஆர்.ஆர். டோல்கீன் Share on WhatsApp